
கிள்ளிக் கிள்ளி எறிகிறேன்
கொழுந்துகளை
மீண்டும் மீண்டும்
துளிர்க்கின்றன விரைவில்.
வேரறுக்கவும் முடியவில்லை
வெட்டியெறியவும் முடியவில்லை...
உரமாக என்னை
சிறுகச் சிறுக விழுங்குகின்றன
என் கோபங்கள்!
- தே. ரம்யா
கொட்டக்குளம் (திருவண்ணாமலை)
தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment