Thursday, December 16, 2010

மீண்டும் வந்தது!

மீண்டும் வந்தது!
---------------

தோளில்போட்டு நான் வளர்த்த
தனயனின் சிகிச்சைக்காக
மாதக்கணக்கில் மருத்துவமனையில்
தொலைந்துபோன என் தூக்கமும்
கலைந்துபோன என் நிம்மதியும்
குலைந்துபோன உடல்நலமும்
மீண்டும் வருமோவென நான்
மனம் குண்றி இருந்தபோது,
மருத்துவ அறிவியலும்
மகேசனின் திருவருளும் -என்
மகனைக் காப்பாற்றியதில்....
தொலைந்துபோன நிம்மதியும்
தூக்கமும், மகிழ்ச்சியும்
மீண்டும் வந்தது எனக்குள்ளே!

- எஸ், சுமதி, சேலம்
தமிழ்நாடு