Monday, July 27, 2009

"கவிதைநூல் வெளியீட்டு விழா"

அன்புடையீர், வணக்கம்.

கவிஞர்கள் செல்வராஜா, திருமயம் பெ. பாண்டியன், வேலூர் வெ. ராம்குமார், வைகை ஆறுமுகம் ஆகியோரின் கவிதைகள் அடங்கிய....

"கொஞ்சம் கவிதைகளும், மிச்சமிருக்கும் வார்த்தைகளும்"

கவிதைநூல் வெளியீட்டு விழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

நாள்: 02.08.2009 ஞாயிறு
இடம்: சேலம், தி லிட்டரரி சொசைட்டி (பேலஸ் திரையரங்கம் அருகில்)
நேரம்: காலை 10.00 to 12.00.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

- அ, கார்த்திகேயன் அமைப்பாளர், "இனிது இலக்கிய வட்டம்"
சேலம்.

Saturday, July 25, 2009

கவிதைக்காக.......

கற்களை இட்டு நீர் உயர்த்திய
காக்கையின் அறிவோடு,
சொற்களை இடுகிறேன்
ஒரு கவிதைக்காக.
சமயங்களில்,
விரிசல் விழுந்த பாத்திரமாய்
மனம்.

- ப. தியாகு (9843187331)
கோவை. தமிழ்நாடு.

Wednesday, July 22, 2009

வரம்!



மரங்களின் ஒற்றைக்கால் தவத்தில்
வரமாய்க் கிடைத்தது
மனிதருக்கு நிழல்.


- பா. தியாகு (9659906769)

(நன்றி: RAGA SMS இதழ்/23.07.09)

பலி!



யாருக்கோ தோஷம்,
உயிர் இழந்தது
வாழைக் கன்று!


- செல்வி. தே.ரம்யா
கொட்டக்குளம், திருவண்ணாமலை
தமிழ்நாடு.

Monday, July 20, 2009

பார்வையற்று......!


கருவறையில் இருந்தவரையில்
கண்டதில்லை வெளிச்சத்தை நான்,
பிறந்த பிறகும் வாழ்கிறேன்....
குருட்டுப் பெண்ணாக.


- ஜெயந்தி குமாரி
ஒக்கனூர், தமிழ்நாடு.

குங்குமம்!


நாற்புறமும் மஞ்சள் தடவி
ஊர் ஊராய்ப் பயணிக்கிறது
என் ஜாதகம்,
என் நெற்றி வகிட்டில்
குங்குமத்திற்காக!


- பிரேமா (9994449449)


(நன்றி: "விகடகவி" இதழ்
"பரவசம்" SMS.

Monday, July 13, 2009

SMS இதழ்களின் ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்11


வணக்கம்.

நாள்தோறும் பற்பல கவிஞர்களின் படைப்புகளை அலைபேசி குறுந்தகவல் வாயிலாக நூற்றுக்கணக்கான நண்பர்களுக்கு வழங்கும் உங்கள் கலைப் பணியைப் பாராட்டுகிறேன்.
உங்கள் அனைவரைப் பற்றிய முழு விவரங்களை இத்தளத்தில் பிரசுரித்து, வாசகர்களையும் மகிழ்விக்க விரும்புவதால், உங்களைப் பற்றிய விவரங்களை எனக்கு அனுப்பி உதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

இவை கீழ்க்காணும் எனது புதிய தளத்தில் பிரசுரிக்கப்படும்.

www.smspoets-tamil.blogspot.com


- கிரிஜா மணாளன்

Saturday, July 11, 2009

கவிதாயினி சி. கலைவாணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


இன்று (11.07.2009) பிறந்தநாள் காணும் சகோதரி சி. கலைவாணிக்கு எங்கள் "அன்புடன் குழுமம்" நண்பர்கள்/கவிதை வலைத்தளங்கள்/அலைபேசி கவிஞர்கள் அனைவரின் சார்பில் நல்வாழ்த்துக்கள்!

- கிரிஜா மணாளன்

Tuesday, July 7, 2009

உனது கொலுசு!


போட்டியென்று இனி யாருமில்லையென
உற்சாகத்தில் திளைத்தன,
என்னவளின் கொலுசு
தொலைந்துபோனதை
எப்படியோ தெரிந்துகொண்ட
குயில்கள்!

- ஜே திவாகர் (9789630584)
பொன்னூர், தமிழ்நாடு.

(நன்றி: RAGA SMS)

Sunday, July 5, 2009

செல்வி கலைவாணிக்கு SMS கவிஞர்களின் பாராட்டுக்கள்!

வணக்கம்.
"சுவாமி விவேகானந்தா விருது" பெற்றுள்ள செல்வி சி. கலைவாணியைப் பாராட்டி எங்கள் "உலகத்தமிழ் எழுத்தாளர் சங்க" உறுப்பினர்களும், நாள்தோறும் அலைபேசி வழியாக எனக்குக் கவிதைகளை அனுப்பிவரும் இளங்கவிஞர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் எனது நன்றி.



- கிரிஜா மணாளன்
செயலாளர்/திருச்சி மாவட்டக்கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
திருச்சி 620021.