Saturday, December 27, 2008

காலம்!


நீ சொல்வாயென்று நானும்
நான் சொல்வேனென்று நீயும்
நாள் கடத்தியதில்......
காலம் சொல்லிச் சென்றது
நாம் இழந்த காதலை!


- பி.கே. தங்கராஜ் (9994692452)
காஞ்சீபுரம், தமிழ்நாடு.

எருமை மாடுகள்!

சகதி நீர்
சாக்கடை நீர்
ஓடும் நீர் என
பேதம் பார்ப்பதில்லை
வெப்பம் தணிந்தால்போதுமென
புரண்டு எழுகின்றன
எருமை மாடுகள்!

- கவிஞர் ஆங்கரை பைரவி (9842633785)
(உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்-திருச்சி மாவட்டக்கிளை)
இலால்குடி. திருச்சி மாவட்டம்.

Friday, December 26, 2008

விபத்தில் மனிதநேயம்!

சாலையானது சாதி
விளையாடுகிறது விதி
விபத்தில் சிக்கி
வீழ்ந்தது
மனிதநேய மதி!

- தே. ரம்யா
கொட்டக்குளம், திருவண்ணாமலை, தமிழ்நாடு.

Wednesday, December 24, 2008

அமில மழை!


கத்தியின் பயனை
கைகள் தீர்மானிப்பதுபோல
மழையின் பயனை
மனசே தீர்மானிக்கிறது.
அன்று
உன்னோடு நனைகையில்
என்மீது பொழிந்த அந்த மழை
இன்று
என்மீது பொழிகிறது...
அமில மழை!

- அ. சரவணராஜ் (9943332116)
கோவை, தமிழ்நாடு.

Tuesday, December 23, 2008

இன்னொருவனோடு.......


அப்பாவை கௌரவத்தோடு
அம்மாவை நிம்மதியோடு
தங்கையை மகிழ்ச்சியோடு
தம்பியைத் தன்மானத்தோடு
என்று எல்லோரையும்
வாழவைத்த நீ
என்னையும் வாழவைத்திருக்கிறாய்....
இன்னொருவனோடு!

- அ. சரவணராஜ் (9943332116)
கோவை, தமிழ்நாடு.

Sunday, December 21, 2008

இத்தளத்தில் இதுவரை கவிதைகளை வழங்கியுள்ள கவிஞர்கள்....

அன்புடையீர், வணக்கம்.

இத்தளத்தில் இதுவரை கவிதைகளை வழங்கியுள்ள கவிஞர்களின் பெயர்கள் இங்கே தரப்பட்டுள்ளன. அவர்களுக்கு என் நன்றி.
அவர்களிடமிருந்தும், புதிய கவிஞர்களிடமிருந்தும் தொடர்ந்து கவிதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நமது தஞ்சை மண்ணின் மைந்தர், கவிஞர் புகாரி (கனடா), அவர்களின் "அன்புடன் குழும" நண்பர்களின் பாராட்டுக்களைப் பெற்ற கவிஞர்களின் பெயர்ப் பட்டியல் விரைவில் இத்தளத்தில் வெளியாகும்.

அன்புடன்,
கிரிஜா மணாளன்.


"க்ளிக்" செய்து காண்க.

இவர்கள் தவிர, கீழ்க்காணும் நண்பர்களின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன:

1. கோ. செல்வராஜ், திருச்சி.
2. எம். அக்பர், ஆர்.எஸ்.புரம், கோவை.
3. "விஸ்வாஸ்" (வசந்தி மெய்யப்பன்) இராசிபுரம்.
4. பி.கே.ராஜேஸ்வரி, பச்சப்பாளையம்.
--------------------------------------------

Thursday, December 11, 2008

எழுதுகோல்!


கௌரவிக்கப்பட்டது
எழுதிய முதல் கவிதை
எங்கே மரித்துப்போனதோ
முதல் கவிதைக்கு
உயிர்தந்த அந்த
எழுதுகோல்!

- தே. ரம்யா, கொட்டக்குளம்
திருவண்ணாமலை, தமிழ்நாடு.

முதல் "விருந்தினர்'!


அரசியல் மாநாட்டு விருந்து
எல்லோரையும் அழைத்தார்கள்...
முதலில் வந்தது
ஆடு!

- கோ. செல்வராஜ் (9843334347)
திருச்சி 6200002, தமிழ்நாடு.

சருகுகளின் சரணாலயம்!



சந்ததிகளை ஈன்ற
சருகுகளின் சரணாலயம்...
முதியோர் இல்லம்!

- எம். அக்பர் (9894303726)
ஆர்.எஸ்.புரம், கோவை, தமிழ்நாடு.

ஏக்கம்!


நீ ஏற்றிவைத்ததில் அணைந்துபோன
சில விளக்குகளின் சூட்சுமம்
விளங்கவில்லை உனக்கு...
அவை ஏங்குகின்றன
பொன்னொளி மின்னும்
உனது விரல்களை
மீண்டும் அருகில் பார்க்க!

- வசந்தராஜா (9894303726)
நெய்வேலி, தமிழ்நாடு

Sunday, December 7, 2008

மின்விசிறி!


எதையோ எழுத நினைத்து
எதையெதையோ எழுதினேன்,
எதுவும் எனக்கே புரியாதபோது...
இமைமூடி இருளில்
தொலைந்தேன்.
யாருக்கும் தெரியாமல்
எழுதாத பக்கங்களையும்
இருளில் புரட்டிப் புரட்டிப்
படிக்கிறது
என் வீட்டு மின்விசிறி!

தே.ரம்யா,கோட்டக்குளம்
தமிழ்நாடு.

பைத்தியக்காரன்!



ஒதுக்கப்படுவதை நினைத்து வருந்தி
சிருஷ்டித்துக்கொள்கிறான்
சில கதாபாத்திரங்களாய்
தன் உணர்வுகளைப்
பகிர்ந்துகொள்ள,
'பைத்திய'மென்று விளிக்கப்படும்
அவன்!

- கவிஞர் யாழி (9976350636)
கோவை, தமிழ்நாடு.

Wednesday, December 3, 2008

பாத்திரமறிந்து.......


அழுக்காய் பிச்சைப் பாத்திரம்
அலங்காரமாய் கோயில் உண்டியல்...
பாத்திரமறிந்து
பிச்சையிடும் பக்தர்கள்!

- அ. ராஜீவ் காந்தி, (9786098440)
செங்கம், தமிழ்நாடு.

தீக்குச்சி!


அறை முழுவதும் வெளிச்சம்
உயிர்பெற்ற தீபம்
மரணப்படுக்கையில்....
தீக்குச்சி!

- தே. ரம்யா, கொட்டக்குளம்
திருவண்ணாமலை, தமிழ்நாடு.

ருசியின்றி....


மரநிழலில் அறுசுவை உணவு
ருசிக்கவில்லை
கவனம் முழுவதும்
மேலிருந்து பறவை எச்சம்
தட்டில் விழாமல்
பார்த்துக்கொள்வதிலேயே...!

- வசந்தி மெய்யப்பன் (விஸ்வாஸ்)
இராசிபுரம், தமிழ்நாடு.

Monday, December 1, 2008

அம்மா!


எந்த மழையிலும் நான்
நனைந்ததே இல்லை.
முதல் தூறல் விழும் முன்பே
முந்தானை கொண்டு
மூடிவிடும்
என் 'அம்மா'வால்!

- அ. ராஜீவ்காந்தி (9786098440)
செங்கம், தமிழ்நாடு.

Thursday, November 27, 2008


அவ்வப்போது
துளிர்க்கிறது கண்ணீர்
என் ஞாபக பரணில்
தூசி தட்டும்போதெல்லாம்.

- பி.கே. ராஜேஸ்வரி
பச்சப்பாளையம், தமிழ்நாடு

அடிக்கடி என் பெட்டியை
மோப்பம் பிடிக்கும்
என் செல்ல நாய்க்கு
தெரியாது
உதிரத்தால் எழுதப்பட்ட
காதல் கடிதமொன்று
அதன்
உள்ளே இருப்பது.

- பி.கே.ராஜேஸ்வரி
பச்சப்பாளையம், தமிழ்நாடு.

அந்த வார்த்தைகள்!


உயிர்ப்பித்திருக்கிறது
ஆழமான ஒன்றை,
உன் ஜீவனுள்ள
சொற்கள் தாங்கிய
அந்த வார்த்தைகள்!

- பி.கே.ராஜேஸ்வரி
பச்சப்பாளையம், தமிழ்நாடு.

முடியவில்லையே!


அருகில் இருந்தும்
பேசமுடியாமல்,
உரிமையிருந்தும்
கேட்கமுடியாமல்,
நண்பர்கள்......
தேர்வுக்கூடம்!

- 'வானவில் நண்பன்'
எம். செல்வகுமார்
பாடி புதுநகர், தமிழ்நாடு.

நானே!

உன்னை
நானே நேசித்து
நானே நெருங்கி
நானே தழுவி
நானே விலகி
நானே கோபித்து
நானே வெறுத்து
சமாதானமாகிவிடும்
நெடுந்தொடரொன்று
நெடுநாட்களாய் எனக்குள்
நிகழ்ந்து வருவது
உனக்குத் தெரியுமா உயிரே?


- "ரத்திகா"
திருச்சி, தமிழ்நாடு.

Tuesday, November 25, 2008

மௌனம்!


உன் அன்பின் அடர்வை
உணர்த்தியது
வருத்தங்களின் பொருட்டு
ஊடலாய் இழைந்தோடும்
நீ பேசாமல் தவிர்த்த
தருணங்கள்.

- கவிஞர் யாழி (9976350636)
கோவை, தமிழ்நாடு.

சமாதானப் புறா!


சுதந்திரதினத்தில்
பறக்கவிட
சிறைபிடிப்பு,
சமாதானப் புறா!

- எம். அக்பர் (9894303726)
கோவை, தமிழ்நாடு.

Saturday, November 22, 2008

செல்ஃபோன் ஆபத்துக்கள்!






தொலைபேசி/அலைபேசி ஆகிய சாதனங்கள், நமது தொலைத்தொடர்பு வசதிக்கு மிக மிக உதவியாயிருப்பது உண்மைதான்! ஆனால், அவைகளை நெடுநேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆரோக்கியக் குறைபாடுகளைப் பற்றி மருத்துவர்கள் நமக்கு அடிக்கடி அறிவுறுத்திவருவதையும் நாம் கவனித்து, அதன்படி நடக்கவேண்டும்.

தொலைபேசியில் 17.5 நிமிடத்துக்கு மேலோ, அலைபேசி (Mobile)யில் 12.5 நிமிடத்துக்கு மேலோ தொடர்ந்து பேசுவது காதிலுள்ள மிருதுவான செவிப்பறையைப் பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மேற்கண்ட நிமிடங்களுக்கு மேல் பேசவேண்டியிருந்தால், 3 நிமிடங்கள் இடைவெளி விட்டுப் பேசுவது நல்லது.
(சென்னை, அப்போல்லோ மருத்துவ மனையின் E.N.T. ஸ்பெஷலிஸ்ட் Dr. ரவீந்திரன் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.)

தகவல்: சென்னிமலை சி.பி. செந்தில்குமார்.

Wednesday, November 19, 2008

வெளிச்சம்?


/>

ஆயிரமாயிரம் தீபங்கள்
ஆலயங்களில்
வெளிச்சமென்னவோ
நூலகங்களில் திறப்பின்றி!

- "ரத்திகா" (9842421500)
திருச்சி, தமிழ்நாடு.

Sunday, November 16, 2008

மௌனம்!


ஆறாத ரணங்களை
உண்டாக்குகிறது,
கூரிய வாளையொத்த
வார்த்தைகளைவிட
உன் முனை மழுங்கிய
மௌனம்.

- கவிஞர் யாழி (9976350636)
கோவை, தமிழ்நாடு.


நிலவில் நடப்படும்
தேசீயக்கொடி
நாளை விண்வெளிச் சுற்றுலாவுக்கு
முன்னோடி.
வசப்பட்டது நம் கனவு!

- அ. கௌதமன் (9994368626)
திருச்சி, தமிழ்நாடு.

Thursday, November 13, 2008

அன்பின் அருமை!


வாசிக்கத் தெரிந்த
விரல்களுக்குத்தான் தெரியும்
வீணையின் அருமை..
நேசிக்கத் தெரிந்த
இதயங்களுக்குத்தான் தெரியும்
அன்பின் அருமை!

- எம்.எஸ்.மோகன்ராஜ் (9788330607)
திருப்பூர், தமிழ்நாடு.

உனக்காக!


உயிர்போகும் நேரம்கூட
உன்னதமானதுதான்
அது
உனக்காக என்றால்!

- பா. ஜெயகுமார் (9842163703)
அந்தியூர், தமிழ்நாடு.

பயணம்.........


அடர்ந்துகொண்டே வரும்
உன் மௌனத்தில்
வளர்ந்துகொண்டே போகிறது
பாலைநிலத் தாவரங்கள்
நிறுத்தவியலா என் பயணத்தில்
குறுக்கும் நெடுக்குமாய்
முட்களின் கீறல்கள்
எனக்குமுன் பயணித்தவர்களின்
உதிரச்சுவடுகளில்
என் பாதங்கள்..
ஒரு பிரளயமல்லாது
தகர்க்கமுடியா மௌனக்கதவுகள்.

- "ரத்திகா"
திருச்சி, தமிழ்நாடு.

Monday, November 10, 2008

இதுவரை இத்தளத்தை அலங்கரித்த கவிஞர்கள்!


இதுவரை இத்தளத்தில் 50க்கும் மேற்பட்ட படைப்பாளர்களின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

அக்கவிஞர்கள்:

ரத்திகா- திருச்சி இ.சங்கர்-செய்யார், சி.கிருஷ்ணமூர்த்தி- தாரா மங்கலம், பா.ஜெயகுமார்-அந்தியூர், ராஜீவ்காந்தி-செய்யார், சரவணராஜ்-கோவை, மோகன்ராஜ்-திருப்பூர், கௌதமன்-திருச்சி, அமீர்ஜான் - திருநின்றவூர், ‚மதி-குறிஞ்சிப்பாடி, வசந்தராஜ-நெய்வேலி, கோமதி-கரூர், எஸ். பாண்டியன் - கரூர், பூமிகாந்த் - பூதலூர், ஆர்.ராஜ்குமார்-திருவெறும்பூர், பட்டுராஜ்-கோவை, ஆனந்தன் - திருப்பூர், செல்வகுமார்-பாடிபுதூர், பா.ஜெயகுமார்-எண்ணமங்கலம், யாழி - கோவை, ஞானசேகரன் - புதுவை, ரம்யா-கொட்டக்குளம், சந்தோஷ்குமார்-புதுவை, ஜோதிகார்த்திக்-திருச்சி, எம்.எஸ்.குமரன் - வளவனூர், மஞ்சுளா-மதுரை, ஆங்கரை பைரவி-லால்குடி, பாபு-திருச்சி, கோவிந்தராஜன் - சுப்பிரமணியபுரம், சி. கலைவாணி-ஆரியூர், சுரேஷ்ராஜன் -லால்குடி, கொள்ளிடம் காமராஜ்-திருச்சி.

அனைவருக்கும் எனது அன்பார்ந்த நன்றி!
தொடர்ந்து உங்கள் படைப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பிற கவிஞர்கள் தங்கள் கவிதைகளும் இத்தளத்தில் இடம்பெற விரும்பினால், அலைபேசி: 9940966667 என்ற எண்ணுக்கு SMS செய்ய வேண்டுகிறேன்.

- கிரிஜா மணாளன்.

Sunday, November 9, 2008

காதல்!


கடவுள், கற்பகத்தரு,
காமதேனு, காந்தர்வ உலகம்,
அமுதசுரபி, பாரிஜாத மலர்,
இவைகள்போல....
இருந்துவிட்டுப் போகட்டுமே
நமது அன்பிற்கான
ஒரு பெயரும்
'காதல்' என்று!

- 'ரத்திகா'
திருச்சி. தமிழ்நாடு.

வருத்தம்!


வண்டுகள் ஏதும் வரவில்லை
வருத்தப்பட்டது
பிளாஸ்டிக் பூ!

- இ. சங்கர் (9789527975)
செய்யார், தமிழ்நாடு.

Saturday, November 8, 2008

கைக்குழந்தையாய்.....


இருவருக்கும் வயதானாலும்
இன்னும் கைக்குழந்தையாகவே
இருக்கிறது
நம் காதல்!

- சி. கிருஷ்ணமூர்த்தி (9942666936)
தாராமங்கலம், தமிழ்நாடு.

Thursday, November 6, 2008

எரிமலை!



அடர்ந்த மின்னலாய்
அத்துமீறின ஆசைகள்...
ஆசையுடன்
அணைக்கத் துடித்தேன்
என்னவளை...
அருகில் சென்றபின்தான்
உணர்ந்தேன்
என்னவள் ஒரு
எரிமலை என்று!

- பா. ஜெயக்குமார் (9842163703)
அந்தியூர், தமிழ்நாடு.

பாலுக்காக.....!


பாலுக்காக அழுது அழுது
எச்சில் விழுங்கி
பசியாறுகின்றன
ஈழத்தமிழர் படுகொலையில்
தாயினை இழந்த
குழந்தைகள்!

- ராஜீவ் காந்தி (9445454704)
செய்யார், தமிழ்நாடு.

அது......நீ!


எனக்கென்று
அசையாத சொத்து
எதுமில்லை...
அசையும் சொத்து
ஒன்றேயொன்று,
அது......நீ!

- ஏ. சரவணராஜ் (9943332116)
கோவை, தமிழ்நாடு.

Wednesday, November 5, 2008

சூரியகாந்தி!


உன் பார்வை ஒளியில்
மலர்கின்றன
என் வீட்டு
சூரியகாந்திப் பூக்கள்!

- சி. கிருஷ்ணமூர்த்தி (9942666936)
தாராமங்கலம், தமிழ்நாடு.

கண்ணீர்!


கண்ணீர் சிந்தும்போதுகூட
கவலையில்லை எனக்கு,
காரணம்...
என்றுமே என்
கண்ணீரைத் துடைக்க
உங்கள் கைகள்
இருக்குமென்ற
நம்பிக்கையுடன்!

- மோகன்ராஜ் (9788330607)
திருப்பூர், தமிழ்நாடு.

மழலைச் சொற்கள்!


எந்த தேச மொழியென
வியப்புறுகிறேன்
இயல்பாய்
இனிமையாய்ப் பேசும்
அந்தக் குழந்தைகளின்
மழலைச் சொற்களைக்
கேட்கும்போது!

- கவிஞர் கௌதமன் (9994368626)
திருச்சி, தமிழ்நாடு.