Saturday, June 18, 2016
உலகத் தந்தையர் தினம் - 2016
உன்
பெயரின் முதலெழுத்துக்குச் சொந்தக்காரர்!
பெற்றோர் என்பதன்
தலைப்புக்காரர்!
குடும்பத்தின் தலைமைப் பொறுப்பு!
குறையிலாப் பாசத்தின் பிரதிபலிப்பு!
அன்னைக்குச் சமமாய் அன்புகாட்டி
உன்னை வளர்ப்பதில் வழிகாட்டி!
ஆலோசனை அளிப்பதில் ராஜதந்திரி!
குடும்ப
ஆட்சியில் அவரே முதல் மந்திரி!
அப்பா என்னும் உச்சரிப்பில்
அகவுகின்றது அவரின் பாசப்பிணைப்பு!
தந்தை மகற்காற்றும் நன்றியென
தமிழ்க்கவி வள்ளுவன் உரைத்ததுபோல்,
சிந்தையில் உன்னை என்றும் நிறுத்தி
சீரான வாழ்வளிக்கும் வள்ளல் அவர்!
தந்தைசொல் மிக்க மந்திரம் ஏது?
தவறாமல் அதனை ஏற்றால்
தலைநிமிரும் உன் வாழ்வு!
== தந்தையைப் போற்றுவோம்!==
- செல்வி
ஜெபமாலை மரியண்ணன்
காஞ்சிபுரம்,
தமிழ்நாடு
Thursday, April 7, 2016
Monday, April 4, 2016
கண்ணீரில் விழுந்த
இதயம்!
.
நெஞ்சு
நிறைய
கண்ணீரைக்
கொட்டிவிட்டுச்
சென்றுவிட்டாய்!
மூச்சுவிட
முடியாமல்
மூழ்கிக்
கிடக்கிறது இதயம்.
நீரில்
விழும் எல்லாமும்
எடை
இழக்கும் என்பார்கள்
உன்
கண்ணீரில் விழுந்த
என்
இதயம் மட்டுமே
கனமாய்க்
கனக்கிறது!
==============================================
நீயே
என் காதலி!
உன்
உள்ளத்தைத்
தொடவரும்
ஒவ்வொரு முறையுமே
உன்
பாதங்களைத் தொடமுடியாத
பாவப்பட்ட
அலைகளாய்
நான்
திருப்பி அனுப்பப்படுகிறேன்
எனினும்
என்
காதலை நிராகரிக்கும்
நீயே
என் காதலி!
=============================================
- கவிஞர் புகாரி, கனடா
('காதலிக்கிறேன்
உன்னை எப்போதும்...' தொகுப்பில்)
Subscribe to:
Posts (Atom)








