மீண்டும் வந்தது!
---------------
தோளில்போட்டு நான் வளர்த்த
தனயனின் சிகிச்சைக்காக
மாதக்கணக்கில் மருத்துவமனையில்
தொலைந்துபோன என் தூக்கமும்
கலைந்துபோன என் நிம்மதியும்
குலைந்துபோன உடல்நலமும்
மீண்டும் வருமோவென நான்
மனம் குண்றி இருந்தபோது,
மருத்துவ அறிவியலும்
மகேசனின் திருவருளும் -என்
மகனைக் காப்பாற்றியதில்....
தொலைந்துபோன நிம்மதியும்
தூக்கமும், மகிழ்ச்சியும்
மீண்டும் வந்தது எனக்குள்ளே!
- எஸ், சுமதி, சேலம்
தமிழ்நாடு
Thursday, December 16, 2010
Friday, November 12, 2010

>காந்தியம்
பண்டிகைக் காலங்களில் மட்டுமே
நீயும் கதரும்
நினைவுக்கு வருகிறீர்கள்..
நீ மேல்சட்டையை
ஏழைகளின் நிலைகண்டு வருந்தி
துறந்தாய்,
இன்று...மேலாடைகள்,
விளம்பரத்துக்காகவும்
கவர்ச்சி அணிவகுப்புக்காகவுமே
களையப்படுகின்றன!
கொலையும், கொள்ளையும்
தலைவிரித்தாடுகின்றன!
'காந்தியம்' பேசிய உதடுகள்
இன்று
'கோட்சேயிஸம்" பேசுகின்றன!

கவிதாயினி சுமதி
சேலம், (தமிழ்நாடு)
Monday, September 13, 2010
எங்கள் நன்றி.
அன்புடையீர், வணக்கம்.
12.09.2010 அன்று தமிழ்நாடு, திருச்சி மாநகரில் நிகழ்ந்த "குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) கவிஞர்கள், இதழாளர்கள் குடும்பச் சந்திப்பு சிறப்புடன் நடந்தது. 70 க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் அன்பர்கள் வந்திருந்து சிறப்பித்தனர்.
திரு. அ.ச. அருள்முருகனின் "இதழியல் வளர்ச்சியில் குறுஞ்செய்தி இதழ்கள்" என்னும் நூல் திருச்சி ஈ.வெ.ரா. பெரியார் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் வாசுதேவன் அவர்களால் வெளீயிடப்பட்டது. தொடர்ந்து, கவிஞர்கள், இதழாளர்கள் அறிமுகம், கவிதை வாசிப்பு, "பாரதியே! மீண்டும் பிறந்து வா!" என்னும் தலைப்பில் கவிதைப்போட்டி ஆகியவை நிகழ்ந்தன.
இப்போட்டியில் முதல் பரிசை அந்தியூர் கவிஞர் விநாயகமூர்த்தி அவ்ர்களும், இரண்டாம் பரிசை சேலம் கவிதாயினி திருமதி சுமதி அவர்களும், மூன்றாம் பரிசை திரு ஷ்ரீ காந்த் அவர்களூம் பெற்றனர்.
தொடர்ந்து, கவிஞ்ர்களின் பல்சுவை நிகழ்ச்சிகளும், கலந்துரையாடலும் நிகழ்ந்தன.
விழாவை சிறப்பாக நடத்த இடமளித்து உதவிய பாரதி மெட்ரிகுலேஷன் பள்ளி தலையாசிரியர் திரு. பாலு அவர்களுக்கு எஙகள் நன்றி. இதற்கு முன்நின்று உதவிய எங்கள் சக படைப்பாளர் திரு. ஆர். அப்துல் சலாம் அவர்களுக்கும், ஆலோசனைகளைத்தந்து உதவிய திரு. தி.மா.சரவணன் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.
விழவுக்கான பங்கேற்பாக நன்கொடையளித்து உதவிய அனைவருக்கும் எங்கள் நன்றி.
விரைவில் இத்தளத்தில் விழாவின் புகைப்படங்கள் வெளியாகும்.
அன்புடன்,
கிரிஜா மணாளன்
அ.ச.அருள்முருகன்.
12.09.2010 அன்று தமிழ்நாடு, திருச்சி மாநகரில் நிகழ்ந்த "குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) கவிஞர்கள், இதழாளர்கள் குடும்பச் சந்திப்பு சிறப்புடன் நடந்தது. 70 க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் அன்பர்கள் வந்திருந்து சிறப்பித்தனர்.
திரு. அ.ச. அருள்முருகனின் "இதழியல் வளர்ச்சியில் குறுஞ்செய்தி இதழ்கள்" என்னும் நூல் திருச்சி ஈ.வெ.ரா. பெரியார் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் வாசுதேவன் அவர்களால் வெளீயிடப்பட்டது. தொடர்ந்து, கவிஞர்கள், இதழாளர்கள் அறிமுகம், கவிதை வாசிப்பு, "பாரதியே! மீண்டும் பிறந்து வா!" என்னும் தலைப்பில் கவிதைப்போட்டி ஆகியவை நிகழ்ந்தன.
இப்போட்டியில் முதல் பரிசை அந்தியூர் கவிஞர் விநாயகமூர்த்தி அவ்ர்களும், இரண்டாம் பரிசை சேலம் கவிதாயினி திருமதி சுமதி அவர்களும், மூன்றாம் பரிசை திரு ஷ்ரீ காந்த் அவர்களூம் பெற்றனர்.
தொடர்ந்து, கவிஞ்ர்களின் பல்சுவை நிகழ்ச்சிகளும், கலந்துரையாடலும் நிகழ்ந்தன.
விழாவை சிறப்பாக நடத்த இடமளித்து உதவிய பாரதி மெட்ரிகுலேஷன் பள்ளி தலையாசிரியர் திரு. பாலு அவர்களுக்கு எஙகள் நன்றி. இதற்கு முன்நின்று உதவிய எங்கள் சக படைப்பாளர் திரு. ஆர். அப்துல் சலாம் அவர்களுக்கும், ஆலோசனைகளைத்தந்து உதவிய திரு. தி.மா.சரவணன் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.
விழவுக்கான பங்கேற்பாக நன்கொடையளித்து உதவிய அனைவருக்கும் எங்கள் நன்றி.
விரைவில் இத்தளத்தில் விழாவின் புகைப்படங்கள் வெளியாகும்.
அன்புடன்,
கிரிஜா மணாளன்
அ.ச.அருள்முருகன்.
Tuesday, September 7, 2010
குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) குடும்பத்தின் 4 வது சந்திப்பு மற்றும் ஆண்டுவிழா!
குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) குடும்பத்தின் 4 வது சந்திப்பு
மற்றும் ஆண்டுவிழா!
நாள்: 12.09.2010 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடம்: பாரதி ஆங்கிலப்பள்ளி, மன்னார்புரம் - கருணாநிதி நகர் சாலை, திருச்சி 20.
தமிழ்நாடு.
நிகழ்ச்சிகள்:
குறுஞ்செய்திக் கவிஞர்களின் சுய அறிமுகம்
கவியரங்கம்
திரு. அ.ச. அருள்முருகனின் "இதழியல் வளர்ச்சியில் குறுஞ்செய்தி இதழ்கள்"
கவிதைத் திறனாய்வுநூல் வெளியீட்டு விழா.
இணையதளத்தில் குறுஞ்செய்திக் கவிஞர்களின் படைப்புகள் -
கலந்துரையாடல்
மற்றும்
நகைச்சுவை விருந்து.
தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் படைப்பாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.
உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
- கிரிஜா மணாளன்
மற்றும் ஆண்டுவிழா!
நாள்: 12.09.2010 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடம்: பாரதி ஆங்கிலப்பள்ளி, மன்னார்புரம் - கருணாநிதி நகர் சாலை, திருச்சி 20.
தமிழ்நாடு.
நிகழ்ச்சிகள்:
குறுஞ்செய்திக் கவிஞர்களின் சுய அறிமுகம்
கவியரங்கம்
திரு. அ.ச. அருள்முருகனின் "இதழியல் வளர்ச்சியில் குறுஞ்செய்தி இதழ்கள்"
கவிதைத் திறனாய்வுநூல் வெளியீட்டு விழா.
இணையதளத்தில் குறுஞ்செய்திக் கவிஞர்களின் படைப்புகள் -
கலந்துரையாடல்
மற்றும்
நகைச்சுவை விருந்து.
தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் படைப்பாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.
உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
- கிரிஜா மணாளன்
Wednesday, September 9, 2009
Wednesday, August 26, 2009
திருச்சி மாநகரில்....."குறுஞ்செய்தி" இதழாசிரியர்கள்/கவிஞர்கள் சந்திப்பு (SMS journals Editors & poets Meet - 2009 at Tiruchi)

ஓர் மகிழ்ச்சியான அறிவிப்பு!
===============================
“குறுஞ்செய்தி இதழாளர்கள் (SMS இதழாசிரியர்கள்) மற்றும் படைப்பாளர்களின் சந்திப்பு நிகழ்ச்சி” வருகிற 13.09.2009 ஞாயிறுஅன்று, திருச்சி மாநகரத்தில் நிகழவிருக்கிறது.
தமிழ்நாட்டிலுள்ள “குறுஞ்செய்தி இதழாளர்கள்/ படைப்பாளர்கள்” (SMS journal editors & poets) அனைவரும் இதில் கலந்துகொண்டு, ஏனைய படைப்பாளர்கள்/இதழாளர்களைச் சந்தித்து மகிழவும், கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவும் இது ஓர் அரிய வாய்ப்பாக அமையுமென்று நம்புகிறோம்.
நிகழ்ச்சி: 13.09.2009 (ஞாயிறு) காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணிவரை.
நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம்: காஜாமியான் மேனிலைப் பள்ளி, (தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம் எதிர்புறம்) மன்னார்புரம், திருச்சி 620020.
ஹைக்கூ தொகுப்பு வெளியீடு: நமது கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகள் அடங்கிய தொகுப்பு அன்றைய சந்திப்பின்போது வெளியிடப்படவிருக்கிறது. குறுஞ்செய்தி இதழாசிரியர்களும், அவ்விதழ்களைச் சார்ந்த கவிஞர்களும் தங்களது படைப்புகளை SMS மூலம் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.
மற்றும் விவரங்கள் விரைவில் இணையதளத்திலும், அலைபேசி குறுந்தகவல் வாயிலா கவும் அனைவருக்கும் அறிவிக்கப்படும்.
அழைப்பிதழ் பெறும் நண்பர்கள் அனைவரும் தங்கள் வருகையைப் பதிவுசெய்து எங்களது ஏற்பாடுகளுக்கு உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
ஒருங்கிணப்பாளர்கள் :
கிரிஜா மணாளன்
அலைபேசி: 9952422383)
அ. கௌதமன்
அலைபேசி: 9994368626)
(திருச்சி மாவட்டக் கிளை / உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்)
Monday, August 24, 2009
நமது கவிஞருக்கு "தமிழ்மாமணி" விருது!

வாழ்த்துவோம்!
=============
நமது ‘உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் - திருச்சி மாவட்டக்கிளை’யைச் சேர்ந்த
அன்பிற்குரிய, கவிஞர் திரு கொட்டப்பட்டு ப. சக்திவேலன் அவர்களுக்கு
தஞ்சாவூர் “தமிழ்த்தாய் அறக்கட்டளை” அமைப்பு, “தமிழ்மாமணி” என்னும் விருதினை அளித்துக் கௌரவித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்துக் கொள்கிறேன்.
அண்மையில் திருச்சி தமிழ்ச்சங்க அரங்கில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு பொன்னவைக்கோ அவர்கள் கவிஞருக்கு இந்த விருதினை வழங்கி வாழ்த்தினார்.
நமது அமைப்பிலுள்ள அனைத்து உறுப்பினர்கள் சார்பாக அவருக்கு நமது நல்வாழ்த்துக் களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரது தொடர்புக்கு, அலைபேசி எண்: 9443638947
- கிரிஜா மணாளன்
செயலாளர் / திருச்சி மாவட்டக்கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
திருச்சி 620 021, (தமிழ்நாடு)
Subscribe to:
Posts (Atom)



