Monday, August 24, 2009

நமது கவிஞருக்கு "தமிழ்மாமணி" விருது!



வாழ்த்துவோம்!
=============

நமது ‘உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் - திருச்சி மாவட்டக்கிளை’யைச் சேர்ந்த
அன்பிற்குரிய, கவிஞர் திரு கொட்டப்பட்டு ப. சக்திவேலன் அவர்களுக்கு
தஞ்சாவூர் “தமிழ்த்தாய் அறக்கட்டளை” அமைப்பு, “தமிழ்மாமணி” என்னும் விருதினை அளித்துக் கௌரவித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்துக் கொள்கிறேன்.

அண்மையில் திருச்சி தமிழ்ச்சங்க அரங்கில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு பொன்னவைக்கோ அவர்கள் கவிஞருக்கு இந்த விருதினை வழங்கி வாழ்த்தினார்.

நமது அமைப்பிலுள்ள அனைத்து உறுப்பினர்கள் சார்பாக அவருக்கு நமது நல்வாழ்த்துக் களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரது தொடர்புக்கு, அலைபேசி எண்: 9443638947


- கிரிஜா மணாளன்
செயலாளர் / திருச்சி மாவட்டக்கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
திருச்சி 620 021, (தமிழ்நாடு)

No comments: