Tuesday, August 23, 2016
Saturday, August 20, 2016
Monday, July 25, 2016
மனித தெய்வம் ஏ,பி,ஜே,
அப்துல்கலாம் எடுத்த
11 அவதாரங்கள்!
1. மனிதகுலத்தின்மேல் பேரன்பு காட்டி,சீராட்டி
வளர்த்த தெய்வத்தாய்!
2. நாட்டுமக்களுக்கு இறுதிமூச்சுவரை தன் கடமைகளைச்
செய்த, கடமை தவறாத
தந்தை!
3. இந்திய
மக்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படை
தேவை கல்விதான் என்பதை உணர்ந்து,
பறந்து பறந்து, பாடம்
புகட்டிய நிலையிலேயே, இன்னுயிர்
நீத்த ஆசான்!
4. நாட்டு
மக்களின் உயிர்காக்கப் போராடிய
முப்படைகளின் வீரத்தளபதி!
5. நாடு
மற்றும் உலகமுன்னேற்றத்திற்கு அத்தியாவசியமான
அறிவியல் முன்னேறத் திற்காக அல்லும்
பகலும் அயராது உழைத்த
விஞ்ஞானி!
6. ஏழை,
எளிய, நடுத்தர மக்களின்
நலனுக்காக அரும்பாடுபட்ட தர்மசிந்தனையாளன்!
7. நோய்வாய்ப்பட்டோர் மற்றும் உடல் ஊனமுற்றோர்
நலம்பேண அரிய மருத்துவக்
கண்டுபிடிப்புகளைத் தந்த மருத்துவர்!
8. கடின உழைப்புதான் முன்னேற்றத்திற்கு ஒரேவழி
என்பதை உலகுக்கு உணர்த்திய உன்னத உழைப்பாளி!
9. இந்தியாவை
2020ல்
வல்லரசாக்கியே தீருவேன் என்று
ஒவ்வொரு இந்தியனையும் சபதமேற்கத் தூண்டிய
போராளி!
10. அரசியல்
கொள்கைகள், வேறுபாடுகள், ஏழை
- பணக்காரன், படித்தவர் - படிக்காதவர் போன்ற பாகுபாடுகள்
பார்க்காமல், இறுதிமூச்சு வரை
பறந்து பறந்து
மக்களிடையே தன்
உன்னத கருத்துக்களைப் பரப்பிய சுதந்திரப் பறவை!
11. 50 ஆண்டுகளாகியும்
பலரால் சாதிக்க முடியாததை,
3 ஆண்டுகள் பதவிக்காலத்தில் சாதித்துக்காட்டிய, இந்திய
மக்கள் அனைவரையும் இலட்சியக்கனவு
காணவைத்த சாதனையாளன்!
(நன்றி
: பேராசிரியர் ஆர்.ரெங்கராஜன்,
திருச்சி)
பதிவு : - கிரிஜா மணாளன்
Saturday, June 25, 2016
Wednesday, June 22, 2016
Saturday, June 18, 2016
உலகத் தந்தையர் தினம் - 2016
உன்
பெயரின் முதலெழுத்துக்குச் சொந்தக்காரர்!
பெற்றோர் என்பதன்
தலைப்புக்காரர்!
குடும்பத்தின் தலைமைப் பொறுப்பு!
குறையிலாப் பாசத்தின் பிரதிபலிப்பு!
அன்னைக்குச் சமமாய் அன்புகாட்டி
உன்னை வளர்ப்பதில் வழிகாட்டி!
ஆலோசனை அளிப்பதில் ராஜதந்திரி!
குடும்ப
ஆட்சியில் அவரே முதல் மந்திரி!
அப்பா என்னும் உச்சரிப்பில்
அகவுகின்றது அவரின் பாசப்பிணைப்பு!
தந்தை மகற்காற்றும் நன்றியென
தமிழ்க்கவி வள்ளுவன் உரைத்ததுபோல்,
சிந்தையில் உன்னை என்றும் நிறுத்தி
சீரான வாழ்வளிக்கும் வள்ளல் அவர்!
தந்தைசொல் மிக்க மந்திரம் ஏது?
தவறாமல் அதனை ஏற்றால்
தலைநிமிரும் உன் வாழ்வு!
== தந்தையைப் போற்றுவோம்!==
- செல்வி
ஜெபமாலை மரியண்ணன்
காஞ்சிபுரம்,
தமிழ்நாடு
Subscribe to:
Posts (Atom)