நானே நேசித்து
நானே நெருங்கி
நானே தழுவி
நானே விலகி
நானே கோபித்து
நானே வெறுத்து
சமாதானமாகிவிடும்
நெடுந்தொடரொன்று
நெடுநாட்களாய் எனக்குள்
நிகழ்ந்து வருவது
உனக்குத் தெரியுமா உயிரே?

- "ரத்திகா"
திருச்சி, தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment