Wednesday, August 12, 2009

சுமை!
=====

கங்காருவைப்போல் நான்
தூக்கிச் சுமந்த துக்கங்கள்
தாமாகவே விடைபெற்றுக்கொள்கின்றன
உன் மடியில் என்னை நீ
ஏந்திக்கொள்ளும்போது.

- ப. தியாகு (9659986769)
கோவை, தமிழ்நாடு.

---------------------------------------
தவம்
====

ஒற்றைக்காலில் தவமிருக்கும் கொக்கு
நதிக்கரையில்
நீருக்காக.

- ஆர். நாகராஜ் (9965015776)
மதுரை. தமிழ்நாடு.

-------------------------------------



உயிர்!
=====
ஒவ்வொரு உயிரற்ற
பொம்மைகளிடமும் இருக்கிறது
குழந்தைகளின் உயிர்.

- வெ.ராம்குமார் (9865244918)
வேலூர், தமிழ்நாடு.
------------------------------------

சர்வதேச இளைஞர்தினக் கவிதை
===============================

முடிந்தால் முடியும்!
===================
இளைஞனே!
உன்னால் முடியும்,
எதையும் வெல்வதற்கு!
சகோதரனே!
உன்னால் முடியும்,
எதையும் சந்திப்பதற்கு!
உன் கையில் உளி எடுத்து
கருத்தோடு நீ
கல்லை உடைத்தால்,
கல்லும் கலைச்சிற்பமாய் உருவெடுக்கும்!
உருக்கொடுக்கும் உன்
சாதனைக்குக் கைகொடுக்கும்!

- கவிதாயினி தே. ரம்யா
கொட்டக்குளம் (திருவண்ணாமலை)
தமிழ்நாடு.
======================================

No comments: