Friday, March 27, 2009

கோபங்கள்!





கிள்ளிக் கிள்ளி எறிகிறேன்
கொழுந்துகளை
மீண்டும் மீண்டும்
துளிர்க்கின்றன விரைவில்.
வேரறுக்கவும் முடியவில்லை
வெட்டியெறியவும் முடியவில்லை...
உரமாக என்னை
சிறுகச் சிறுக விழுங்குகின்றன
என் கோபங்கள்!

- தே. ரம்யா
கொட்டக்குளம் (திருவண்ணாமலை)
தமிழ்நாடு.

Thursday, March 26, 2009

நாட்காட்டி!









தினமும் மகிழ்ச்சியாக
நாட்காட்டியின்
தாளைக் கிழிக்கிறேன்..
நமக்கும் பூமிக்குமுள்ள
தொடர்பு
குறைவது அறியாமல்.


- பரவை பாரதி
பரவைக்கோட்டை
தமிழ்நாடு

Tuesday, March 24, 2009


மனிதனே! மனிதநேயம் காக்க
உனக்கேன் தயக்கம்?
மறந்து, மறைந்துபோகும்
மனிதநேயம் மலர,
உனக்குள் வளரட்டும்
நல்வழக்கம்!
போதைப் பொருளில்
உனக்கேன் மயக்கம்?
நீ விழித்தெழுந்து
தயக்கத்தை தகர்த்தெறி!
உன்னைக் கண்டு விழித்தெழும்
இந்த பூமி!


- தே. ரம்யா, கொட்டக்குளம்,
(திருவண்ணாமலை)தமிழ்நாடு.

Monday, March 23, 2009

அசோகமரம்!


வீரனைப் புதைத்த இடம்
விறைப்பாய் வளர்ந்தது
அசோக மரம்!


- கே.ஏ. ராமலிங்கம் (9940771501)
சிறுவந்தட்டு (விழுப்புரம்), தமிழ்நாடு.

Sunday, March 22, 2009

தீக்குச்சி!



எரிக்கப்படுவோம் என்றாலும்
விரைப்பாக முன்நிற்கும்
தீக்குச்சி!


- ராமலிங்கம் (9940771501)

"உலக வானிலை தின"க் கவிதை.

வெப்பமாகும் பூமி
வேறுபடும் பருவநிலை
வேதனையில் மக்கள் நிலை!


-
கவிஞர் அ. கௌதமன் (9994368626)
திருச்சி, தமிழ்நாடு.

கருமேகம்!


யார் திட்டியது?
கருத்துக் கிடக்கிறது
மேகத்தின் முகம்!

- சி. கலைவாணி, அரியூர்.
(வேலூர் மாவடடம்) தமிழ்நாடு.