Sunday, March 22, 2009

தீக்குச்சி!



எரிக்கப்படுவோம் என்றாலும்
விரைப்பாக முன்நிற்கும்
தீக்குச்சி!


- ராமலிங்கம் (9940771501)

"உலக வானிலை தின"க் கவிதை.

வெப்பமாகும் பூமி
வேறுபடும் பருவநிலை
வேதனையில் மக்கள் நிலை!


-
கவிஞர் அ. கௌதமன் (9994368626)
திருச்சி, தமிழ்நாடு.

கருமேகம்!


யார் திட்டியது?
கருத்துக் கிடக்கிறது
மேகத்தின் முகம்!

- சி. கலைவாணி, அரியூர்.
(வேலூர் மாவடடம்) தமிழ்நாடு.

Friday, March 13, 2009

இறைவனின் வேடம்!


வரம் கேட்கும் நோக்கில்
ஆலயம் சென்றேன்..
என்னைக் கர்ணன் ஆக்கக்
காத்திருந்தார் வாயிலில் கடவுள்,
வேடம் தரித்து.


- கவிஞர் யாழி, (9976350636)
கோவை, தமிழ்நாடு.

Friday, March 6, 2009

ஆறாம் அறிவு?

ஐந்தறிவை மிஞ்சியது
ஆறறிவு,
பறவை விதைத்த மரத்தை
பகுத்தறிவற்று வெட்டினான்..
ஆறாம் அறிவை
அடகுவைத்து!

- தே.ரம்யா
கொட்டக்குளம், தமிழ்நாடு

"கவிஞர் கோவை யாழி"யின் கவிதைகள்

சமூகம் என்மீது உடுத்திய
ஆடைகளைக் கிழித்திட்டு
அம்மணமாகிறேன் நான்,
அழகாய் அன்பொழுகச் சிரிக்கும்
குழந்தையென
என் ஆன்மா.

----------------------------
புரிதலற்றவர்களால்
பரிகசிக்கப்படலாம்
வார்த்தைகளைப் புதைத்து
உணர்வுகளைப் பிரசவிக்கும்
நம் அன்பு.

-----------------------------
பாதுகாப்புக்கென வெட்டப்பட்ட
பதுங்கு குழிகள்..
பாரதம் கைவிட்டதால்
புதைகுழிகளாயின!

-----------------------------
காயம்பட்ட மூங்கிலில் நுழைந்து
வெளியேறுகிறது காற்று,
வாழ்வியல் சூத்திரங்களை
வாசித்துக் காட்டியபடி.

------------------------------

- கவிஞர் கோவை யாழி (9976350636)
கோவை, தமிழ்நாடு.

Monday, March 2, 2009

நானும்கூட...!


'நானும் ஒரு இயேசுதான்!'
பெருமைப்பட்டது
'பீனிக்ஸ் பறவை".


- 'கலைத்தாமரை' (ராஜேஸ்வரி)
மதுரை 625 020