Friday, March 6, 2009

"கவிஞர் கோவை யாழி"யின் கவிதைகள்

சமூகம் என்மீது உடுத்திய
ஆடைகளைக் கிழித்திட்டு
அம்மணமாகிறேன் நான்,
அழகாய் அன்பொழுகச் சிரிக்கும்
குழந்தையென
என் ஆன்மா.

----------------------------
புரிதலற்றவர்களால்
பரிகசிக்கப்படலாம்
வார்த்தைகளைப் புதைத்து
உணர்வுகளைப் பிரசவிக்கும்
நம் அன்பு.

-----------------------------
பாதுகாப்புக்கென வெட்டப்பட்ட
பதுங்கு குழிகள்..
பாரதம் கைவிட்டதால்
புதைகுழிகளாயின!

-----------------------------
காயம்பட்ட மூங்கிலில் நுழைந்து
வெளியேறுகிறது காற்று,
வாழ்வியல் சூத்திரங்களை
வாசித்துக் காட்டியபடி.

------------------------------

- கவிஞர் கோவை யாழி (9976350636)
கோவை, தமிழ்நாடு.

No comments: