Sunday, January 11, 2009

பாவக்கணக்கு!



கோயில் வாசலில் கையேந்தி
யாசிக்கும் இரவலனைப் புறக்கணித்து
கோயில் உண்டியலில்
கொண்டுபோய்ச் சேர்த்தேன்
என் காணிக்கையை.
கடவுள் கண்சிமிட்டிச் சிரித்தபடி
வரவு வைத்துக்கொண்டார்
என் கணக்கில்
இன்னொரு பாவத்தை!

- ஏ. சரவணராஜ் (9943332116)
கோவை, தமிழ்நாடு.

No comments: