
கோயில் வாசலில் கையேந்தி
யாசிக்கும் இரவலனைப் புறக்கணித்து
கோயில் உண்டியலில்
கொண்டுபோய்ச் சேர்த்தேன்
என் காணிக்கையை.
கடவுள் கண்சிமிட்டிச் சிரித்தபடி
வரவு வைத்துக்கொண்டார்
என் கணக்கில்
இன்னொரு பாவத்தை!
- ஏ. சரவணராஜ் (9943332116)
கோவை, தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment