Sunday, December 7, 2008

மின்விசிறி!


எதையோ எழுத நினைத்து
எதையெதையோ எழுதினேன்,
எதுவும் எனக்கே புரியாதபோது...
இமைமூடி இருளில்
தொலைந்தேன்.
யாருக்கும் தெரியாமல்
எழுதாத பக்கங்களையும்
இருளில் புரட்டிப் புரட்டிப்
படிக்கிறது
என் வீட்டு மின்விசிறி!

தே.ரம்யா,கோட்டக்குளம்
தமிழ்நாடு.

No comments: