Thursday, November 13, 2008

பயணம்.........


அடர்ந்துகொண்டே வரும்
உன் மௌனத்தில்
வளர்ந்துகொண்டே போகிறது
பாலைநிலத் தாவரங்கள்
நிறுத்தவியலா என் பயணத்தில்
குறுக்கும் நெடுக்குமாய்
முட்களின் கீறல்கள்
எனக்குமுன் பயணித்தவர்களின்
உதிரச்சுவடுகளில்
என் பாதங்கள்..
ஒரு பிரளயமல்லாது
தகர்க்கமுடியா மௌனக்கதவுகள்.

- "ரத்திகா"
திருச்சி, தமிழ்நாடு.

No comments: