Saturday, November 22, 2008

செல்ஃபோன் ஆபத்துக்கள்!






தொலைபேசி/அலைபேசி ஆகிய சாதனங்கள், நமது தொலைத்தொடர்பு வசதிக்கு மிக மிக உதவியாயிருப்பது உண்மைதான்! ஆனால், அவைகளை நெடுநேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆரோக்கியக் குறைபாடுகளைப் பற்றி மருத்துவர்கள் நமக்கு அடிக்கடி அறிவுறுத்திவருவதையும் நாம் கவனித்து, அதன்படி நடக்கவேண்டும்.

தொலைபேசியில் 17.5 நிமிடத்துக்கு மேலோ, அலைபேசி (Mobile)யில் 12.5 நிமிடத்துக்கு மேலோ தொடர்ந்து பேசுவது காதிலுள்ள மிருதுவான செவிப்பறையைப் பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மேற்கண்ட நிமிடங்களுக்கு மேல் பேசவேண்டியிருந்தால், 3 நிமிடங்கள் இடைவெளி விட்டுப் பேசுவது நல்லது.
(சென்னை, அப்போல்லோ மருத்துவ மனையின் E.N.T. ஸ்பெஷலிஸ்ட் Dr. ரவீந்திரன் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.)

தகவல்: சென்னிமலை சி.பி. செந்தில்குமார்.

No comments: