Thursday, November 27, 2008

நானே!

உன்னை
நானே நேசித்து
நானே நெருங்கி
நானே தழுவி
நானே விலகி
நானே கோபித்து
நானே வெறுத்து
சமாதானமாகிவிடும்
நெடுந்தொடரொன்று
நெடுநாட்களாய் எனக்குள்
நிகழ்ந்து வருவது
உனக்குத் தெரியுமா உயிரே?


- "ரத்திகா"
திருச்சி, தமிழ்நாடு.

No comments: