
அலைபேசி வாயிலாக அனுதினமும் கவிதைகளை வழங்கி அன்புள்ளங்களைக் கவர்ந்துவரும் என் அருமைக் கவிஞர்களே! அனைவருக்கும் எனது அன்பு வணக்கம்!
தன்னுள் ஊற்றெடுக்கும் கற்பனைகளை, கவியாற்றலை இதழ்களிலோ, கவியரங்கங்களிலோ அரங்கேற்ற வாய்ப்புகள் கிடைக்காத இளங்கவிஞர்களுக்கு இக்கால அலைபேசி ஊடகம் ஓர் வரப்பிரசாதமாக, சங்கப்பலகையாக அமைந்துள்ளது.
நாள்தோறும் என் அலைபேசியை வந்தடையும் எண்ணற்ற கவிதைகளைப் படிக்கும்போது, இத்தனை திறமையுள்ள இளங்கவிஞர்கள் அடையாளம் கண்டுகொள்ள வாய்ப்பில்லாமல் இருக்கின்றார்களே என்ற இரக்கம் மேலிட்டதுண்டு. அதன் விளைவே, நான் உங்களுக்காக, உங்கள் படைப்புக்களை உலகறியச் செய்வதற்காகத் துவங்கியுள்ள வலைத்தளம் இது.
நீங்கள் தினமும் அனுப்பும் கவிதைகள்/குறும்பாக்கள் ஆகியவற்றை இத்தளத்தில் பிரசுரித்து உங்களை மகிழ்விப்பதே எனது நோக்கம். 
உங்கள் நல்ல படைப்புகளை நாடறிய, உலகறியச் செய்யவிருக்கும் என் முயற்சிக்கு உங்கள் ஒத்துழைப்பைத் தாருங்கள்.
                                                        வாழ்த்துக்களுடன்,
                                                        கிரிஜா மணாளன்
                                       செயலாளர்/திருச்சி மாவட்டக்கிளை
                                         உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
                                           திருச்சிராப்பள்ளி 620021
                                          (தொடர்புக்கு: 9940966667)
எனது பிற வலைத்தளங்கள்:
கவிதைகள்:
www.tiruchikavignarkal.tamilblogs.com
www.kavithaigal.tamilblogs.com
நகைச்சுவை:
www.girijamanaalan-humour.blogspot.com
www.girijanandha-humour.blogspot.com
www.humour-garden.blogspot.com